CID உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் மட்டு

CID உத்தியோகத்தர்கள் 704 பேரின் வௌிநாட்டுப் பயணத்திற்கு வரையறை

by Staff Writer 25-11-2019 | 6:36 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 704 உத்தியோகத்தர்களுக்கு வௌிநாட்டுப் பயணங்களை வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தியோகத்தர்களின் பெயர்ப்பட்டியல் விமான நிலைய குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் வௌிநாட்டிற்கு செல்ல விமான நிலையத்திற்கு வரும் சந்தர்ப்பத்தில் தனக்கு அறிவிக்குமாறு கடிதம் ஒன்றினூடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வௌிநாடு செல்ல வேண்டுமாயின் அமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.