பிரதமர் நிதியமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் நிதியமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றார்

by Staff Writer 25-11-2019 | 2:42 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (25) நிதியமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். நிதி, பொருளாதாரம், அரச கொள்கை வகுப்பு, புத்தசாசனம், கலாசாரம் மற்றும் சமய விவகாரம், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடந்த வௌ்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்தார். இதன்போது ஜனாதிபதி செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தர, நிதியமைச்சு மற்றும் அரச திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.