நண்டு, இறால் வளர்ப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

நண்டு, இறால் வளர்ப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

by Staff Writer 25-11-2019 | 2:50 PM
Colombo (News 1st) நன்னீர் மீன் வளர்ப்பு, நண்டு, இறால் மற்றும் கடலட்டை உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கான பயிற்சிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள நன்னீர் மீன்பிடி செயற்பாடுகள் மற்றும் மத்திய நிலையங்கள் தொடர்பிலும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.