ஆரையம்பதியில் கேணியில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

by Staff Writer 25-11-2019 | 7:54 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஆரையம்பதி, திருநீற்றுக்கேணியில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 19 வயதான இருவரும் 22 வயதான ஒருவருமே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.