படைப்புழுவைக் கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பம்

படைப்புழுவைக் கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பம்

by Staff Writer 24-11-2019 | 6:45 PM
Colombo (News 1st) நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படைப்புழுத் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. படைப்புழு பெருகும் காலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.