கென்யாவில் கடும் மழை; 29 பேர் உயிரிழப்பு

கென்யாவில் கடும் மழை; 29 பேர் உயிரிழப்பு

by Staff Writer 24-11-2019 | 6:15 PM
Colombo (News 1st) கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் நிலவும் சீரற்ற வானிலையால் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர். கென்யாவின் மேற்குப் பகுதியில் தொடர்ச்சியாகப் பலத்த மழை பெய்வதுடன், மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன. வெள்ளத்தினால் வீதிகள், மூடப்பட்டுள்ளதுடன் பாலமொன்றும் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்புப் பணிகளை முன்னெடுக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா இராணுவத்தினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.