கண்டி - கோட்டை இடையே புதிய ரயில் சேவை

கண்டி - கோட்டை இடையே புதிய ரயில் சேவை

by Staff Writer 24-11-2019 | 3:10 PM
Colombo (News 1st) கண்டி தொடக்கம் கொழும்பு - கோட்டை வரையிலான புதிய ரயில், சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் புதிய ரயில், கண்டியிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு கொழும்பு - கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பிக்குமென ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த ரயில் கொழும்பு - கோட்டையிலிருந்து மாலை 5.20 மணிக்கு கண்டி நோக்கி செல்லுமெனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, 8 புதிய ரயில் எஞ்சின்கள் அடுத்த மாதமளவில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அவற்றில் 6 எஞ்சின்கள் சீனாவிலிருந்தும் 2 எஞ்சின்கள் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.