போதைப்பொருளுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல்

இரத்தினபுரியில் போதைப்பொருளுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல்

by Staff Writer 24-11-2019 | 6:34 PM
Colombo (News 1st) இரத்தினபுரியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்கள் உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (24) இரத்தினபுரி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய சந்தேகநபர் ஒருவர் மாத்திரம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி, கலபொட, கல்கந்துர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரிடமிருந்து 15 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், 1 கிராம் நிறையுடைய அசீஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.