இலங்கை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை

by Staff Writer 23-11-2019 | 9:07 PM
Colombo (News 1st) பாரத பிரதமரை சந்திக்கவுள்ள இலங்கை ஜனாதிபதியை தாம் சந்திக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முனவைத்து தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அதற்கான நடவடிக்கையை மாநில மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கால வரையறையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், நான்கு அம்ச கோரிக்கைகளை தமிழக கரையோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜ் முன்மொழிந்துள்ளார்.