கைதானவர்களிடம் மேலும் 13 கிலோகிராம் ஹெரோயின்

இராஜகிரியவில் கைதானவர்களிடமிருந்து மேலும் 13 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றல்

by Staff Writer 23-11-2019 | 3:54 PM
Colombo (News 1st) இராஜகிரியவில் 10 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மேலும் 13 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இராஜகிரியவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்றைய தினம் 2 கிலோ 24 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 11 கிலோ 662 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 31, 25 மற்றும் 28 வயதுடைய கன்தர, கொழும்பு மற்றும் ஹிக்கடுவ பகுதிகளைச் சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.