ஹெரோயினுடன் இராஜகிரியவில் இருவர் கைது

12 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இராஜகிரியவில் இருவர் கைது

by Staff Writer 22-11-2019 | 7:36 PM
Colombo (News 1st) இராஜகிரியவில் 10 கிலோகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் கூறினர். 24 வயதான இளைஞர் ஒருவரும் 31 வயதான பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 12 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது.