யமுனை ஆற்றின் மாசு டெல்லி காற்று மாசில் தாக்கம்

யமுனை ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு டெல்லி காற்று மாசில் தாக்கம்

by Staff Writer 22-11-2019 | 4:07 PM
இந்தியாவின் யமுனை ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு, டெல்லி காற்று மாசில் தாக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றில் மாசு அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகள் பலவற்றின் கழிவுகள் யமுனை ஆற்றில் கலக்கின்றன. இதனால் அண்மைக்காலமாக யமுனை ஆறு மாசடைந்து காணப்படுகின்றது. இந்நிலையில், இந்தியாவின் யமுனை ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு டெல்லி காற்று மாசில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, BIS எனப்படும் இந்திய தரநிலைகள் பணியகம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. டெல்லியிலுள்ள ஆறுகளின் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இவற்றில் வேதியியல் நச்சுப்பொருட்கள் உட்பட சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர்களும் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.