சில ரயில்களின் போக்குவரத்து நேரத்தில் திருத்தம்

சில ரயில்களின் போக்குவரத்து நேரத்தில் திருத்தம்

by Staff Writer 22-11-2019 | 4:00 PM
Colombo (News 1st) சில ரயில்களின் போக்குவரத்து நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கி பகல் 1.40-க்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில், இன்று முதல் பகல் 1.25-க்கு பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் 1.45 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவெலவிற்கு புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்தவும் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பகல் 1.55-க்கு வேயங்கொட நோக்கி பயணிக்கும் கடுகதி ரயில் இதன் பின்னர் அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கண்டி தொடக்கம் கொழும்பு கோட்டை வரை புதிய ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.