கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 24 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 22-11-2019 | 3:44 PM
Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை காலை 9 மணியிலிருந்து 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கொழும்பு நகர சபைக்குட்பட்ட பகுதிகள், இராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த, இராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து வீதிகளுக்குமான நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. கொழும்பு நகரின் அபிவிருத்தி வேலைத்திட்டம் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.