by Staff Writer 22-11-2019 | 3:31 PM
Colombo (News 1st) தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய அதிகபட்ச நிதியை வரையறை செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றிக்கொள்ளுமாறு பஃவ்ரல் (PAFFREL) அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதன் காரணமாக சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வது இலகுவாக அமையுமென அவ்வமைப்பினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நடத்தப்படாது இருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலையும் விரைவில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.