ஏப்ரல் தாக்குதல்: 63 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

4/21 தாக்குதல் ; காத்தான்குடியில் கைதான 63 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 21-11-2019 | 2:30 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மட்டக்களப்பு - காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.சி. ரிஷ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று (21) ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள தேசிய தௌபீக் ஜமாத் அமைப்புடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் காத்தான்குடியில் 63 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.