by Staff Writer 21-11-2019 | 10:09 AM
Colombo (News 1st) புதிய ஆளுநர்கள் 6 பேர் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இதன்பிரகாரம்,
* மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக சீதா அரம்பேபொல
* தென் மாகாண ஆளுநராக கலாநிதி விலீ கமகே
* மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ கமகே
* வட மேல் ஆளுநராக A.J.M. முஸம்மில்
* சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ
* ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ராஜா கொல்லுரே
ஆகியோர் புதிய ஆளுநர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.