புகையால் சூழப்பட்ட அவுஸ்திரேலிய நகரங்கள்

புகையால் சூழப்பட்ட அவுஸ்திரேலிய நகரங்கள்

by Staff Writer 21-11-2019 | 1:38 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ காரணமாக முக்கிய நகரங்களான சிட்னி மற்றும் எடிலெய்ட்டில் புகை சூழ்ந்துள்ளது. நேற்றைய தினத்தை காட்டிலும் இன்று வளியில் புகையில் அடர்த்தி அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வளியின் தரம் அபாய எல்லையை எட்டியுள்ளதால் சுவாசத்துடன் தொடர்புடைய நோய்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாக கடந்த வாரத்தில் 6 மாநிலங்களில் வளியில் புகை பரவியிருந்ததுடன் சில மாநிலங்களில் வளி பேரழிவுக் கட்டத்தை அடைந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தீவிரமாகி வரும் காட்டுத் தீயினால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீ காரணமாக தெற்கு அவுஸ்திரேலியாவுக்கு நேற்று பேரழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பம் மற்றும் காற்றினால் இரு மாநிலங்களில் காட்டுத் தீ பரவும் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.