by Staff Writer 21-11-2019 | 8:35 PM
Colombo (News 1st) தாம் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் தகவல் வெளியிடும் பொறுப்பு ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக வெளியான போலியான தகவல்கள் காரணமாக, ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தன்னை மேற்கோள் காட்டியும் தமது தீர்மானம் என குறிப்பிட்டும் சமூக வலைத்தளங்களின் ஊடாக போலியான தகவல்கள் வெளியிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அல்லது ஜனாதிபதி செயலகம் அல்லது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களின் ஊடாக மாத்திரமே தமது தீர்மானங்கள் குறித்து அறிக்கப்படும் என ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.