சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை

by Staff Writer 21-11-2019 | 1:57 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளர் கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 45 உறுப்பினர்கள், சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ள கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.