இனிய பாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 21-11-2019 | 7:13 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமாரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய பி.சிவகுமார் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பகுதியில் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் இனிய பாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி திருக்கோவில் பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.