அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் இரத்து

அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் இரத்து

by Staff Writer 21-11-2019 | 7:44 AM
Colombo (News 1st) அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் இது குறித்த கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் அமைச்சு, மாகாண மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.