by Staff Writer 20-11-2019 | 11:23 AM
Colombo (News 1st) நாட்டிலுள்ள சிறுவர்களில் 50 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டுடன் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலை, பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் என பொரளை மருத்துவ ஆய்வு நிலையத்தின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
முற்பகல் 10 மணியளவிலும் பிற்பகல் 2 மணியளவிலும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை திறந்தவௌியில் இருப்பது அத்தியவசியம் என டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.