by Staff Writer 20-11-2019 | 1:22 PM
Colombo (News 1st) நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 84 வீதம் வரை அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக நாளாந்த மின் உற்பத்தி 45 வீதம் வரை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்கக சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில்,
காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 94.6 வீதமாகவும்
மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 91 வீதமாகவும்
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 86.8 வீதமாகவும்
அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.