English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
20 Nov, 2019 | 9:47 pm
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்று இன்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவடன நிலமே பிரதீப் திலங்க தேர வரவேற்றார்.
அரச தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைய, தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவது வழமையாகும்.
ஶ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், புதிய ஜனாதிபதி தனது வருகையை பதிவு செய்யும் வகையில் விசேட விருந்தினர் பதிவேட்டில் குறிப்பொன்றை எழுதினார்.
தலதா மாளிகையை விட்டு வௌியேறிய ஜனாதிபதிக்கு, அங்கு கூடியிருந்த மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.
தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி பின்னர் மல்வத்து மகா விகாரையில் மல்வத்து மகாநாயக்க தேரர் உள்ளிட்ட தேரர்களிடம் ஆசிபெற்றார்
ஜனாதிபதிக்கு ஆசி வழங்கிய மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் நினைவுச்சின்னத்தினை வழங்கினர்.
அதனையடுத்து, ஜனாதிபதி அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்றார்.
அஸ்கிரிய மகா விகாரையில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றுக்கொண்டார்.
மெனிக்ஹின்ன – ஹூரீகடுவ வித்யாசாகர பிரிவெனாவிற்கும் ஜனாதிபதி சென்றிருந்தார்.
29 Nov, 2019 | 04:00 PM
22 Nov, 2019 | 05:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS