by Staff Writer 19-11-2019 | 9:26 AM
Colombo (News 1st) அநுராதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் படைப்புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
படைப்புழு தாக்கத்தை ஆரம்ப கட்டத்திலேயே ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வட மத்திய மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் கௌரி சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் அம்பாறை மாவட்டத்தில் பரவிய படைப்புழு, 3 மாதங்களுக்குள் அம்பாறை, மொனராகலை, குருணாகல், காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களுக்கும் பரவியமை குறிப்பிடத்தக்கது.