நீர் விநியோகத் தடை இன்று வழமைக்குத் திரும்பும்

நீர் விநியோகத் தடை இன்று வழமைக்குத் திரும்பும்

by Staff Writer 19-11-2019 | 8:53 AM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் இன்று (19) பிற்பகல் வேளைக்குள் வழமைக்கு கொண்டுவரப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்லேயிலிருந்து மாளிகாகந்த வரை நீரை விநியோகிக்கும் பிரதான நீர்க்குழாயில் கசிவு ஏற்பட்டதால், நேற்று முற்பகல் முதல் கோட்டை, புறக்கோட்டை, சிற்றம்பலம் ஏ.கார்டினர் மாவத்தை மற்றும் டி ஆர் விஜேவர்தன மாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொழும்பு - 12 மற்றும் கொழும்பு - 13 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுகின்றது. கசிவு ஏற்பட்டுள்ள குழாயில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.