புதிய பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை என அறிவிப்பு

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை

by Staff Writer 19-11-2019 | 6:24 PM
Colombo (News 1st) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஓஷத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இன்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ இன்று மாலை அறிவித்தார். அந்த பதவிக்காக தகுந்த நபரை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக நாலக்க களுவெவ குறிப்பிட்டார்.