ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்

by Chandrasekaram Chandravadani 19-11-2019 | 11:08 AM
Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (19) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.