புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார்

இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார்: அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ

by Staff Writer 19-11-2019 | 6:51 PM
Colombo (News 1st) இலங்கையின் புதிய ஜனாதிபதியுடனும் மக்களுடனும் பல துறைகள் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட தயார் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் தனது ட்விட்டர் தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கு மைக் பொம்பியோ வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறையை மறுசீரமைத்தல், பொறுப்புகள் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகிய விடயங்கள் குறித்து இலங்கையில் காணப்படும் அர்ப்பணிப்புகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மக்களுடன் இணைந்து செயற்பட தயார் என அவர் கூறியுள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வாழ்த்துக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக தொடர்புகளையும் முதலீடுகளையும் அதிகரிப்பது தொடர்பில் நெருக்கமானவர்கள் என்ற வகையில் இலாபமீட்டும் முறையில் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்