இலஞ்சம் பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர் கைது

குளியாப்பிட்டியவில் 1500 ரூபா இலஞ்சம் பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர் கைது

by Staff Writer 19-11-2019 | 3:36 PM
Colombo (News 1st) குளியாப்பிட்டியவில் 1500 ரூபா இலஞ்சம் பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் குளியாப்பிட்டிய கிழக்கு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தராவார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது