இறால் வளர்ப்பை மேம்படுத்தத் திட்டம்

இறால் வளர்ப்பை மேம்படுத்தத் திட்டம்

இறால் வளர்ப்பை மேம்படுத்தத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2019 | 7:27 am

Colombo (News 1st) இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இறால் வளர்ப்பில் ஈடுபடுவோருக்குத் தேவையான தொழில்நுட்பம் சார் தெளிவூட்டல்களையும் அதற்கான உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இறாலுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் கேள்வியைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்