காலி மாவட்டத்தில் அதிகளவிலான வீட்டுத் தோட்டங்கள்

காலி மாவட்டத்தில் அதிகளவிலான வீட்டுத் தோட்டங்கள்

by Staff Writer 18-11-2019 | 3:15 PM
Colombo (News 1st) உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் 30,059 வீட்டுத்தோட்டங்களை நிறுவியுள்ளதாக மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 1154 கிராமங்களை மையப்படுத்தி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 33 விவசாய வலயங்களில் இந்த வீட்டுத்திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 3059 பெண்கள் நேரடியான பலன் பெறுவதாக தென் மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.