அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இராஜினாமா

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இராஜினாமா

by Staff Writer 18-11-2019 | 2:54 PM
Colombo (News 1st) மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மக்கள் ஆணையை ஏற்றுக்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டமைக்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேவேளை, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்கவும் இன்று முற்பகல் பதவி விலகியுள்ளார். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து, சில அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். மங்கள சமரவீர, கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம, ருவன் விஜேவர்தன, ஹரீன் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரரா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.