by Bella Dalima 16-11-2019 | 8:14 PM
Colombo (News 1st) இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இன்று மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது.
அமைதியான முறையில் இன்றைய வாக்களிப்பு நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 வீதத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
கொழும்பு - 75 %
கம்பஹா - 82%
களுத்துறை - 75%
கண்டி - 80%
மாத்தளை - 75%
நுவரெலியா - 80 %
காலி - 80 %
மாத்தறை - 80 %
ஹம்பாந்தோட்டை - 80 %
யாழ்ப்பாணம் - 66.5%
கிளிநொச்சி - 73 %
வவுனியா - 75 %
முல்லைத்தீவு - 76.2%
மன்னார் - 71%
மட்டக்களப்பு - 75%
திருகோணமலை - 83%
திகாமடுல்ல- 80 %
குருநாகல் - 80%
புத்தளம் - 75 %
அனுராதபுரம் - 75%
பொலன்னறுவை - 80 %
பதுளை - 80%
மொனராகலை - 80%
இரத்தினபுரி - 84%
கேகாலை - 75%