ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு 80 வீதத்தை எட்டியது: இரத்தினபுரியில் அதிகூடிய வாக்குப்பதிவு

by Bella Dalima 16-11-2019 | 8:14 PM
Colombo (News 1st) இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இன்று மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது. அமைதியான முறையில் இன்றைய வாக்களிப்பு நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 வீதத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். கொழும்பு - 75 % கம்பஹா - 82% களுத்துறை - 75% கண்டி - 80% மாத்தளை - 75% நுவரெலியா - 80 % காலி - 80 % மாத்தறை - 80 % ஹம்பாந்தோட்டை - 80 % யாழ்ப்பாணம் - 66.5% கிளிநொச்சி - 73 % வவுனியா - 75 % முல்லைத்தீவு - 76.2% மன்னார் - 71% மட்டக்களப்பு - 75% திருகோணமலை - 83% திகாமடுல்ல- 80 % குருநாகல் - 80% புத்தளம் - 75 % அனுராதபுரம் - 75% பொலன்னறுவை - 80 % பதுளை - 80% மொனராகலை - 80% இரத்தினபுரி - 84% கேகாலை - 75%