அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் இன்று, நாளை பூட்டு

by Staff Writer 16-11-2019 | 7:46 AM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று மற்றும் நாளைய தினங்களில் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், இன்றும் நாளையும் சட்டவிரோத மதுபான உற்பத்தி, கொண்டுசெல்லல், தம்வசம் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என கலால்வரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.