மாதம்பேயில் சுவரொட்டிகளை வைத்திருந்தவர் கைது

by Staff Writer 15-11-2019 | 3:32 PM
Colombo (News 1st) மாதம்பே பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் சுவரொட்டிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் நோக்கில், அவர்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய சுவரொட்டிகள், மற்றும் கையேடுகளை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய இன்று காலை சிலாபம் - மாதம்பே பகுதியிலுள்ள சந்தேகநபரின் வீட்டை சோதனைக்குட்படுத்திய போது, 3850 சுவரொட்டிகள் மற்றும் கையேடுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.