மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து

யாழில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து: ஒருவர் பலி

by Staff Writer 14-11-2019 | 5:14 PM
Colombo (News 1st) யாழ். சாவகச்சேரி A9 வீதி, நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.