புத்தளத்தில் உப்பு செய்கை பாதிப்பு

புத்தளத்தில் உப்பு செய்கை பாதிப்பு

by Staff Writer 14-11-2019 | 6:47 PM
Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக உப்பு செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு செய்கை மேற்கொள்ளப்படும் வயல்களில் வெள்ள நீர் புகுந்துள்ளமை, நீரில் உப்புத்தன்மை குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு காரணமாக உப்பின் விலை அதிகரித்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.