by Staff Writer 14-11-2019 | 11:15 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 3729 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 3596 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் Paffrel அமைப்பிற்கு 648 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது அமைப்பிற்கு 735 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பு கூறியுள்ளது.