வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

தேர்தலின்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று

by Staff Writer 14-11-2019 | 8:14 AM
Colombo (News 1st) அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று (14) அழைக்கப்பட்டுள்ளனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் அல்லது வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் பங்குபற்றமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் எவ்வாறான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பில் இங்கு தௌிவுபடுத்தப்படவுள்ளது.