சரணாலயங்களை அண்மித்த பகுதிகளில் எலுமிச்சை செய்கை

சரணாலயங்களை அண்மித்த பகுதிகளில் எலுமிச்சை செய்கை

by Staff Writer 14-11-2019 | 1:11 PM
Colombo (News 1st) சரணாலயங்களை அண்மித்த கிராமங்களில் எலுமிச்சை செய்கையை மேம்படுத்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதனூடாக காட்டுயானைகளின் அச்சுறுத்தலை குறைக்க முடியுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.