கிளிநொச்சியில் கேரளக்கஞ்சாவுடன் இளைஞர் கைது

கிளிநொச்சியில் கேரளக்கஞ்சாவுடன் இளைஞர் கைது

by Staff Writer 14-11-2019 | 3:44 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் கேரளக்கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞரிடமிருந்து ஒரு கிலோ 900 கிராம் கேரளக்கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (13) மாலை சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.