மதுபானசாலைகளுக்கு 16, 17ஆம் திகதிகளில் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் 16, 17ஆம் திகதிகளில் பூட்டு

by Staff Writer 14-11-2019 | 11:50 AM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், குறித்த நாட்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தி, கொண்டுசெல்லல், தம்வசம் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என கலால்வரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனடிடையே, நாடு முழுவதும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1000 இற்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாகவும்  திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.