4ஆவது நாளாக தொடரும் தேரரின் உண்ணாவிரதப் போராட்டம்

நான்காவது நாளாகத் தொடரும் தேரரின் உண்ணாவிரதப் போராட்டம்

by Staff Writer 13-11-2019 | 1:30 PM
Colombo (News 1st) கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் ஆரம்பித்த சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, சுதந்திர சதுக்கத்தில் தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தேரரின் உண்ணாவிரதத்திற்கு சிலர் நேற்று பிற்பகல் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க உள்ளிட்ட சிலரும் நேற்று மாலை சுதந்திர சதுக்கத்திற்கு சென்றிருந்தனர்.