தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப காலம் நிறைவு

தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

by Staff Writer 13-11-2019 | 7:33 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித்தினம் இன்றாகும். எந்தக் காரணத்திற்காகவும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினம் நீடிக்கப்பட மாட்டாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதியாக கடந்த 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வாக்காளர்களின் நலன்கருதி காலஅவகாசம் மேலும் நீடிக்கப்பட்டது. இந்நிலையில், இதுவரை தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாதவர்கள், இன்று (13) நள்ளிரவுக்குள் கிராம உத்தியோகத்தரிடமோ, அல்லது தோட்ட முகாமையாளரிடமோ அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கும்போது, ஆள் அடையாளத்தை உறுதிசெய்யும் ஆவணமாக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக, தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிசெய்யும் கடிதமும் வாக்களிப்பின்போது ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணம் என்ற ரீதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.