குருணாகலில் மசாலாப் பொருட்கள் உற்பத்தி 

குருணாகலில் மசாலாப் பொருட்கள் உற்பத்தி 

by Staff Writer 13-11-2019 | 7:39 AM
Colombo (News 1st) குருணாகல் மாவட்டத்தில் மசாலாப் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. செய்கையாளர்களை ஊக்குவித்தல் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சந்தைக்கு விநியோகித்தல் என்பன இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமென திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.