மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 12-11-2019 | 7:10 AM
Colombo (News 1st) இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட, தம்புள்ளை, வெலிகபொல பகுதிகளுக்கும் கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன - பலாங்கொடை வீதியிலும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (12) பிற்பகல் 3 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்றும் பல பகுதிகளில் பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றும் அதிகரித்து வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.