தேரருக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளனர்: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 12-11-2019 | 7:25 PM
Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸவின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இங்குருவத்தே சுமங்கல தேரர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கண்டியில் இன்று கருத்து தெரிவித்தார். தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தேரருக்கு பொய்யான தகவலை யாரோ வழங்கியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்தார்.