ஹெரோயின் கடத்தல்காரர் துப்பாக்கிச்சூட்டில் பலி

காலியில் தப்பியோட முயன்ற ஹெரோயின் கடத்தல்காரர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி

by Staff Writer 12-11-2019 | 4:03 PM
Colombo (News 1st) காலி - கராப்பிட்டிய பகுதியில் தப்பியோட முயன்ற ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அந்நபர் உயிரிழந்துள்ளார். காலி நகர சபைக்கு முன்பாக 33 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் நேற்று (11) பிற்பகல் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். போத்தல பகுதியை சேர்ந்த 34 வயதான ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த சந்தேகநபரை இன்று பகல் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு முற்பட்ட வேளை, சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தர்களை தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.